Saturday 16 April 2016

MY TRAVEL - PATTINATHAR TEMPLE, CHENNAI

பட்டினத்தார் ஜீவ சமாதி:

பட்டினத்தார் ஜீவ சமா
திக்கு சென்றிருந்தேன்..அரசின் நிதியில் அந்த இடம் இப்போது கோவிலாக மாறிவிட்டது..அர்ச்சனை,பூசை செய்ய ஐயர் ஒருவர் என மாறியுள்ளது...காதறுந்த ஊசி கூட கடைசி காலத்தில் துணைக்கு வராது என்று உணர்த்திய இவரின் இடத்தில் நெய் விளக்கு ஏற்றுகிறார்கள்... இறைவனை அடைய பூஜை புனஸ்காரம் எல்லாம் தேவையில்லை என்று சொன்னவர் பட்டினத்தார்..இன்று அவரின் இடம் கோவிலாக!!!
எளிமை மட்டும் தான் இறைவனை அடையும் என்றார்..அவரது பாடல்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது...

தனது தாயின் சடலத்திற்கு பச்சை வாழை மட்டையை வைத்து தீ மூட்டினார்..அப்போது பாடிய பாடல்...

"முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையிலே
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க! மூள்கவே!"