Saturday 30 January 2016

#தவோ தே ஜிங் #லாவோ ட்சு

எனது அலமாரி

தவோ தே ஜிங் லாவோ ட்சு 
தவோ தே ஜிங் - லாவோ ட்சு

புத்தக வாசிப்பு நம்மை வெறும் கருத்தாளனாக மட்டுமில்லாமல், நம்மை இலகுவானவனாக மாற்ற வேண்டும்..அதாவது நமை இன்னும் சிறந்தவனாக மாற்ற வேண்டும்..அந்த இலகுவான தன்மையை லாவோ ட்சு நமக்கு தவோ தே ஜிங்ல் தருகிறார்...அவற்றில் சில பகுதிகள்:

மெதுவாய் வெளிச்சமாகும் வரை
யார் இருட்டை விலக்க முடியும்?
மெதுவாய்த் தெளியும் வரை
யார் கலங்களைத் தெளிய வைக்க முடியும்?
மெதுவாய் அசையும்வரை
யார் தேக்கத்தை முடிகிவிட முடியும்?

இந்த அடிப்படைகளைப் பின்பற்ற மனிதன்
முழுமைக்கு ஆசைப்படுவது இல்லை..
முழுமையற்றிருப்பதால் அவன்
சிதைந்துபோகும்போது
தன்னைப் புதுப்பித்துக்கொள்ள முடியும்
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

ஆயிரம் மைல் பயணம்
காலடி நிலத்திலிருந்து தொடங்குகிறது
எனவே, பெரிய விசயங்களை
ஞானி ஒருபோதும் செய்ய முயல்வதில்லை;
அதனால், பெரிய விசயங்களை
அவன் எப்போதும் சாதிக்க முடிகிறது....
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx